Header Ads

இஸ்ரோவை பார்த்து மீண்டும் ஒருமுறை நாசா வாய்பிளக்க வேண்டிய தேதி அறிவிப்பு.!

நிலவை நோக்கியா சந்திரயான் 1 விண்கலத்தின் பயணம் தொடங்கி கிட்டதட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலைப்பாட்டில் இஸ்ரோ அதன் அடுத்த நிலவு சந்திப்பை திட்டமிட்டுள்ளது. ஆம் நீங்கள் நினைப்பது சரி தான் சந்திரயான் 2 விண்கலமானது 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படவுள்ளது.


இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (இஸ்ரோ) இரண்டாவது ஆளில்லாத நிலவுப் சார்ந்த ஆய்வு பணிக்காக, இந்தியா மீண்டும் இந்த சந்திரனை நோக்கியா பயணத்தை நிகழ்த்தவுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஜிஎஸ்எல்வி எம்கே 2 ராக்கெட்டில் சந்திரயான் 2 விண்ணில் நுழையவுள்ளது.




இந்தியாவின் மிகப்பெரிய ராக்கெட்களில் ஒன்றான ஜிஎஸ்எல்வி எம்கே 2, இதுவரை பல வெற்றிகரமான ஏவல்களை நிகழ்த்தியுள்ளதால் சந்திராயன் 2 விண்கலமும் வெற்றிகரமானதாக அமையுமென இஸ்ரோ நம்புகிறது. 

சந்திரயான் 2 ஆனது ஆர்பிட்டர், லாண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் மற்றும் சுமார் 3,250 கிலோ எடையுள்ளதாகவும் இருக்கும். அறிக்கைகள் படி, ஆர்பிட்டர் ஆனது நிலவின் சுற்றுவட்டப் பாதையின் சுழற்சியில் ஏவப்படும் அங்கிருந்து சந்திரனை அடைய வேத்மிய ரோவர் ஆனது செலுத்தப்பட்டு அது சந்திரனில் மென்மையான தரையிறக்கத்தை நிகழ்த்தும்.





இந்தியாவின் இந்த இரண்டாவது சந்திர கிரகண பயணமானது, இஸ்ரோவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான சந்திரயான் 1- ன் ஒரு மேம்பட்ட பதிப்பாகும். சந்திராயன் 1 மூலம் நிலவில் கால் வைக்க நான்காவது நாடாக இந்தியா ஆனது என்பதும் இந்த மேம்பட்ட சந்திராயன் 2 பதிப்பின் மூலம் இஸ்ரோ நிச்சயமாக மற்றொரு விண்வெளி ஆய்வு சார்ந்த மைல்கல்லை எட்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Don't Miss it.

Powered by Blogger.